
மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து
இதனால் பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. ரசிகர்களின் மனநிலை வேறுவிதமாக மாறி உள்ளதோ என்பது பற்றி ஆராயாமல் வழக்கமான பாணியிலேயே படங்களை அவர்கள் உருவாக்கி வருகின்றனர். இந்தநிலையில் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் ஹிந்தி படங்களின் தோல்விகளுக்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாக காரணம் ஒன்றை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மக்களிடம் தற்போது பாக்கெட்டில் பணம் இல்லை.. ஒரு படத்தை பார்ப்பதற்கு செலவு செய்ய வேண்டுமென்றால் அந்த படத்தை பற்றி நன்கு உறுதி செய்து கொண்ட பின்னரே தியேட்டருக்கு செல்ல விரும்புகிறார்கள்.. அப்படி இல்லை என்றால் கேஜிஎப், பாகுபலி போன்ற எதிர்பார்ப்பு கொண்ட இயக்குனர்களின் படங்களுக்கு மட்டுமே செல்ல விரும்புகிறார்கள்.. இப்போது அவர்கள் சினிமா, கிரிக்கெட் ஆகியவற்றை மறந்து விட்டு நாட்டில் நிலவும் பொருளாதார பற்றாக்குறை குறித்து தான் பேசி வருகிறார்கள்” என்று அறிவார்ந்த விதமாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!