
வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பேன் : லீனா மணிமேகலை பிரமாணப் பத்திரம் தாக்கல்
இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பலமுறை சம்மன் அனுப்பியும் லீனா மணிமேகலை ஆஜராகவில்லை. வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சுசி கணேசன் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை 4 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மணிமேகலை இந்த வழக்கில் ஆஜராக மாட்டார். அவர் இந்திய இறையாண்மையையும், சட்டத்தையும் மதிக்காதவர் அதனால் அவர் இல்லாமலேயே இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று சுசி கணேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக லீனா மணிமேகலை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ககூடாது என்று சுசிகணேசன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!