
தொடர்ந்து ஈகோ யுத்தத்தில் ஜெயித்து வரும் பிரித்விராஜ்
சொல்லப்போனால் இந்த இருவருக்கும் எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் பிரித்விராஜ், விவேக் ஓபராயின் தாயிடம் சொன்ன ஒரு வார்த்தை காரணமாக பெரிதாகும் ஒரு பிரச்னை இவர்கள் இருவருக்கும் நீயா நானா பார்த்துவிடலாம் என்கிற ஈகோ மோதலை உருவாக்குகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான டிரைவிங் லைசன்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் ஆகிய படங்களும் பிரித்விராஜ் நடிப்பில் ஈகோ யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் தான். அந்த வகையில் ஈகோ யுத்த கதைகள் பிரித்விராஜூக்கு தொடர்ந்து வெற்றி தருகின்றன என்பது ஆச்சரியமான விஷயம் தான்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!