
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல்
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு கதாநாயகி மதுனிகா பேசியதாவது: இந்த கதையை இயக்குநர் என்னிடம் சொன்ன போது நான் பயந்துவிட்டேன். இந்த கதையில் என்னால் நடிக்க முடியுமா? என்று தோன்றியது. ஆனால், இயக்குநர் தான் எனக்கு தைரியம் கொடுத்து உங்களால் நடிக்க முடியும், நடியுங்கள் என்றார்.
இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அனைத்து பெண்களுக்கும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. பலர் பாலியல் தொடர்பான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். நானும் கூட பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறேன் என்றார்.
முதல் பட விழாவிலேயே மதுனிகாக இப்படி பேசியது அனைருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. படம் வருகிற 15ம் தேதி வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!