
மும்பை நடிகைகளால் தமிழ் நடிகைகளுக்கு நெருக்கடி: பிரியாமணி வருத்தம்
இந்த நிலையில் மும்பை நடிகைகளால் தென்னிந்திய நடிகைகள் குறிப்பாக தமிழ் நடிகைகள் சில நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறியிருக்கிறார். ஒரு நேர்காணலில் இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தமிழ் சினிமாவில் முந்தைய காலகட்டங்களில் நடிகைகளின் தோற்றம் பற்றிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. அவர்களின் நடிப்பு மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை நடிகைகளின் வருகைக்கு பிறகு நாயகிகள் வெள்ளையாக இருக்க வேண்டும் ஒல்லியாக உடல்கட்டுகோப்புடன் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது.
மும்பை நடிகைகள் ஒல்லியா உடல்கட்டுக்கோப்புடன் இருப்பதும், வெள்ளையா இருப்பதும் இயல்பிலேயே அவர்களுக்கு வாய்த்தது. ஆனால் இங்கு அப்படி இல்லை. இதனை புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள். இதனால் தமிழ் நடிகைகள் நெருக்கடியை சந்தித்து வந்தார்கள். கவர்ச்சியாக நடிக்க கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆனால் இப்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்போது வடக்கிலும் நமது நிறத்தை விரும்புகிறார்கள். நமது திறமையை மதிக்கிறார்கள். பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டிலும் கூட நமது எல்லை விரிவடைந்திருக்கிறது. இவ்வாறு பிரியாமணி கூறியயுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!