
கேன்ஸ் திரைப்பட விழாவில் ராக்கெட்டரி
இந்த படம் இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. ஜூலை 1ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா மற்றும் ரான் டோனாச்சி போன்ற புகழ்பெற்ற சர்வதேச நடிகர்களுடன், ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. "பாலைஸ் டெஸ் பெஸ்டிவல் பிரீமியர்" பிரிவில் இப்படம் திரையிடப்படவுள்ளது. இந்திய கலாச்சார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாதவன் கூறியிருப்பதாவது: நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். நான் நம்பி நாராயணனின் கதையை மட்டுமே சொல்ல விரும்பினேன், ஆனால் தற்போது நடப்பதையெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. கடவுளின் ஆசியுடன், நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம், படத்திற்கு நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் பார்க்க நான் நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். ஒரு அறிமுக இயக்குநராக, எனக்கு அதிக பதட்டமாக இருக்கிறது. இப்படம் இந்தியாவை பெருமைப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். என்கிறார் மாதவன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!