
பூர்வீக கிராமத்தில் வீடு கட்டிய சிவகார்த்திகேயன்
ஏப் 16, 2022
Advertisement
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் சிவகார்த்திகேயன். இப்போது தமிழில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது பூர்வீக கிராமம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருவீழிமழலை ஆகும். பூர்வீக இசை குடும்பம் அவருடையது. சிவகார்த்திகேயன் தாத்தாக்களான கோவிந்தராஜா பிள்ளை, தட்சினாமூர்த்தி பிள்ளை இருவரும் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நாதஸ்வராக கலைஞராக விளங்கியவர்கள்.
சிவகார்த்தியேனின் தந்தை போலீஸ் அதிகாரியாக திருச்சியில் பணியாற்றியதால் நீண்ட காலம் சிவகார்த்திகேயன் திருச்சியில் வளர்ந்தார். இந்த நிலையில் தாத்தாக்கள் வாழ்ந்த பூர்வீக கிராமமான திருவீழிமழலையில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ் புத்தாண்டு தினத்தன்று கிரஹபிரவேசம் நடந்துள்ளது. அதில் சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருக்கிறார்.
சிவகார்த்தியேனின் தந்தை போலீஸ் அதிகாரியாக திருச்சியில் பணியாற்றியதால் நீண்ட காலம் சிவகார்த்திகேயன் திருச்சியில் வளர்ந்தார். இந்த நிலையில் தாத்தாக்கள் வாழ்ந்த பூர்வீக கிராமமான திருவீழிமழலையில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ் புத்தாண்டு தினத்தன்று கிரஹபிரவேசம் நடந்துள்ளது. அதில் சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருக்கிறார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!