
உள்ளம் உருகுதய்யா பாடலை நீக்கும்படி போலீசில் புகார்
அனைத்திந்திய நேதாஜி சங்கத்தின் தலைவரான ராகுல் காந்தி என்பவர் எதற்கும் துணிந்தவன் படத்தில் உள்ளம் உருகுதய்யா பாடலில் இடம் பெற்றுள்ள காட்சிகள் தமிழ் கடவுளின் மாண்பை சீர்குலைக்கும் விதமாக இருப்பதாகவும், அந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த பாடலை இயக்கிய பாண்டிராஜ் நடித்த சூர்யா, எழுதிய யுகபாரதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!