
ஏ.ஆர்.ரகுமானின் பாடலுக்கு சண்டை போட்ட மோகன்லால்
கதைப்படி மோகன்லால் தனது கிராமத்து மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் தனது நண்பரான ஏ.ஆர்.ரகுமான் அழைத்தால் வருவார் என்று நிரூபிப்பதற்காகவும் ஒரு மேடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார். அதில்தான் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு பாடுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. தூள் படத்தில் சிங்கம் போல என்கிற பாடலை பரவை முனியம்மா பாட, அதில் விக்ரம் எதிரிகளுடன் மோதும் சண்டைக்காட்சியை படமாக்கி இருப்பார்கள். அதேபோல இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் மேடைக் கச்சேரியில் முக்காலா பாடலை பாடிக்கொண்டிருக்க, மோகன்லால் மேடையின் பின்பக்கம் எதிரிகளை அடித்து துவைத்துக் கொண்டிருப்பதாக இந்த காட்சியை படமாக்கியுள்ளனர். தமிழில் கூட முகம் காட்டாத ஏ.ஆர்.ரகுமான் மலையாள படத்தில் நடித்திருப்பது மலையாள ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!