
சரண்யா மோகனிடம் சிம்பு பரத நாட்டியம் கற்றுக்கொண்டது எப்படி
கேரளாவில் உள்ள பல் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் சரண்யா மோகன். எடைக்குறைப்புக்காக கேரளாவிற்கு சென்ற சிம்புவுக்கு ஒருமுறை சிகிச்சை அளிப்பதற்காக அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சரண்யாவின் கணவர் சென்றிருந்தார். அதன்பின் ஒருமுறை அவரது கிளினிக்கிற்கு சிம்பு வந்தபோது, அங்கே தனது கணவரை பார்ப்பதற்காக சரண்யாவும் வந்துள்ளார். அங்கே அவரை பார்த்து ஆச்சர்யப்பட்டு போன சிம்பு, பேச்சுவாக்கில் பரதநாட்டியம் கற்றுத்தர யாரையாவது சிபாரிசு செய்யுமாறும் கேட்டுள்ளார்.. ஆனால் கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த சமயத்தில் தோதான நபர்கள் கிடைக்கவில்லை.
அதனால் தானே குருவாக மாறி களத்தில் இறங்கி விட்டார் சரண்யா மோகன்.. தினசரி ஒருமணி நேர பயிற்சி என கிட்டத்தட்ட இரண்டு வாரம் சிம்புவுக்கு பரதநாட்டிய பயிற்சி அளித்துள்ளார்.. சிம்புவுக்கு நடனம் எளிதான விஷயம் என்பதால் பரதநாட்டியத்தின் ஒவ்வொரு படியையும் விரைவிலேயே கற்றுக்கொண்டாராம். அதன்பிறகு சில நாட்கள் கழித்து, சரண்யா மோகன் வீட்டிற்கு துணிகள், இனிப்பு மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் என நிறைய பரிசுப்பொருட்களை தனது தரப்பு நபர்கள் மூலம் அனுப்பி வைத்தாராம் சிம்பு..




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!