
சிம்பு வழக்கில் விஷால் பெயரை நீக்க கோர்ட் மறுப்பு
இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறு புகார் கொடுத்ததாக மைக்கேல் ராயப்பன் மீது சிம்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அப்போது தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த விஷாலை தனது வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார்.
தான் தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவராக இல்லை, சங்க நிர்வாகத்துக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று விஷால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் விஷாலை நீக்குவதற்கு சிம்பு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க கோரிய நடிகர் விஷால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்தது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!