
ஒரே மாதத்தில் டிவிக்கு வரும் ராணா டகுபட்டியின் 1945
இப்படத்தின் தயாரிப்பாளருக்கும் படத்தின் நாயகன் ராணா டகுபட்டிக்கும் சம்பள விவகாரம் மற்றும் சில விவகாரங்களில் சண்டை மூண்டது. அது குறித்து ராணா கூட சமூகவலைதளத்தில் படத்தைப் பற்றியும், தயாரிப்பாளர் பற்றியும் கமெண்ட் செய்திருந்தார்.
ஆறு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படத்தை எப்படியோ ஒரு வழியாக கடந்த மாதம் வெளியிட்டார்கள். தெலுங்குப் படத்தைப் பார்த்த விமர்சகர்கள் படத்திற்கு கடுமையான விமர்சனங்களை எழுதியிருந்தார்கள். படத்திற்கு ராணாவும் டப்பிங் பேசவில்லை. அவருக்குப் பதிலாக யாரையோ டப்பிங் பேச வைத்துள்ளார்களாம்.
இந்நிலையில் இப்படத்தை இன்னும் சில தினங்களில் டிவியில் ஒளிபரப்ப உள்ளார்களாம். தியேட்டர்களிலேயே படத்தைப் பார்க்க யாரும் வராத போது டிவியில் யார் படத்தைப் பார்க்கப் போகிறார்கள் என்று டோலிவுட்டினர் கிண்டலடிக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!