
சினிமாவில் பிசியான பிரஜின் - சீரியலில் இருந்து விலகல்
அதன்பிறகு சுற்றுலா, மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் ஒரு ஹீரோவாக நிலைத்து நிற்க முடியவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே வந்தவர், சின்னத்தம்பி, அன்புடன் குஷி, வைதேகி காத்திருந்தாள் தொடர்களில் நடித்தார்.
இந்த நிலையில் இப்போது மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார், நினைவெல்லாம் நீயடா, சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, பெயரிடப்படாத ஒரு படம் என 3 படங்களில் நடித்து வருகிறார். இனி சினிமாவில் தீவிர கவனம் செலுத்தும் விதமாக வைதேகி காத்திருந்தாள் தொடரில் இருந்து வெளியேறினார் பிரஜின்.
இந்த சீரியலில் பிரஜின் ஹீரோவாகவும், சரண்யா ஹீரோயினாகவும் நடித்து வந்தனர். தற்போது இந்த தொடரில் பிரஜினுக்கு பதிலாக ராஜபார்வை தொடரில் நடித்த முன்னா நடிக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!