சூர்யாவை அடுத்தடுத்து இயக்கும் நான்கு மெகா இயக்குனர்கள்
Advertisement
Advertisement
சூர்யாவை அடுத்தடுத்து இயக்கும் நான்கு மெகா இயக்குனர்கள்
ஜன 29, 2022
அ நிறம் | அளவு
Advertisement
பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ள சூர்யா அடுத்து தன்னை வைத்து நந்தா, பிதாமகன் படங்களை இயக்கிய பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கும் சூர்யா, அந்த படத்தை முடித்ததும் சிவா, சுதா ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து பாலா படத்தில் நடிப்பதை உறுதி செய்துவிட்ட சூர்யா, அதன் பிறகு வெற்றிமாறன், சிறுத்தை சிவா, சுதா ஆகிய மூவரில் யார் இயக்கத்தில் முதலில் நடிக்கப் போகிறார் என்பதை தெரிவிக்கவில்லை.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!