
விக்ரம் பாணியில் நடிக்கும் லட்சுமி மேனன்
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. திடீரென அவருக்கு வாய்ப்புகள் நின்று போனது. பிரபு தேவாவுடன் நடித்துள்ள யங் மங் சங் படம் வெளிவரவில்லை. கடைசியாக புலிக்குத்தி பாண்டி படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடித்திருந்தார். இதுவும் தொலைக்காட்சியில் வெளியானது.
இந்த நிலையில் லட்சுமி மேனன் சத்தமின்றி நடித்துள்ள படம் ஏஜிபி. ஆர்.வி.பரதன், சாய் ஜீவிதா என்கிற குழந்தை நட்சத்திரம், மோத்தீஸ்வர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரே மனிதருக்குள் மூன்று கதாபாத்திரங்கள் உள்நுழைந்து அந்த மனிதரை ஆட்டிவைக்கும் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் தான் இந்தப் படம். இப்படி மூன்று பாத்திரங்கள் உள்நுழைந்து பாதிப்புக்குள்ளாகும் பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார் என்றார்.
இப்படியான ஒரு கேரக்டரில்தான் அந்நியன் படத்தில் விக்ரம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!