
ரைட்டர் படத்தை பாராட்டிய கே.பாக்யராஜ்
அதில், ரைட்டர் படம் பார்த்தேன். மீண்டும் நாம் முதன்மை இடத்தை தக்கவைக்கக்கூடிய நம்பிக்கை கிடைத்துள்ளது. யாருமே வேடம் போட்டு நடித்ததாக தெரியவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு காவலரின் உண்மையான வாழ்க்கையில் நுழைந்து பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த படத்தில் முதன்மை ரோலில் நடித்துள்ள சமுத்திரகனி ஹீரோவா? இல்லை இயக்குனர் ஹீரோவா? இல்லை தயாரிப்பாளர் ஹீரோவா? என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது. ஆனால் என்னைப்பொறுத்தவரை தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தான் பெரிய ஹீரோ. படம் பாருங்கள் நான் சொன்னது உங்களுக்கு புரியும். ரைட்டர் படத்தை பார்த்தவர்கள் சான்சே இல்லை என்று சொன்னார்கள். விமர்சனங்களைப்பார்த்து விட்டு நானும் படத்தை பார்த்தேன். அனைவருக்குமே சான்சே இல்லை என்ற அந்த அனுபவம் கிடைக்கும். இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!