
ஒரு இடத்திற்கு போனதும் அவாய்ட் பண்ணறாங்க - அஞ்சலி குறித்து பிளாக் பாண்டி வருத்தம்
இந்நிலையில் அஞ்சலியுடன் அங்காடி தெரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிளாக் பாண்டி அஞ்சலி குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, அஞ்சலியும் நானும் அங்காடித்தெரு படத்திற்கு முன்பே நல்ல நண்பர்கள். சேர்ந்து தான் நடன பயிற்சி எடுத்தோம். சமீபத்தில் ஒரு முறை மலேசியா போகும்போது அங்கு தான் அவளை பார்த்தேன். பயங்கரமாக திட்டினேன். ஏண்டி உனக்கு போன் பண்ணனும் என்றால் மேனேஜரை கூப்பிட்டு தான் எங்களிடமே பேச சொல்லுவியா? என்று கேட்டேன். பழைய நட்பு அடிப்படையில் அப்படி உரிமையோடு அவளிடம் பேசினேன். உடனே அவள் தன்னுடைய போன் நம்பரை கொடுத்து கூப்பிடு என்று சொன்னார். நானும் போன் பண்ணினேன். தொடர்ந்து 4 முறை கூப்பிட்டேன். ஆனால், அவ எடுக்கவே இல்லை. மீண்டும் அவாய்ட் பண்ண ஆரம்பித்தது தெரிந்தது. பொதுவாகவே அந்த இடத்திற்கு போனதுக்கப்புறம் அவர்களுக்குள் அந்த மாதிரி செய்ய தோணுதோ? என்று தெரியவில்லை என்று கூறினார். இப்படி இவர் பேசி இருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!