
அண்ணாத்த 50வது நாள் - ‛பாட்ஷா டயலாக்கை சுட்டிக்காட்டிய ரஜினி
இதுதொடர்பாக ரஜினி வெளியிட்ட ஆடியோ சுருக்கம் : ‛‛கொரோனா உள்ளிட்ட பல தடைகளை கடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிறைய சிரமங்களுக்கு இடையே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. படம் வெளியானதும் மழை வந்து குறுக்கிட்டது. எதிர் விமர்சனங்களும் அதிகம் வந்தன. எதிர் விமர்சனம் மற்றும் மழை ஆகியவற்றை கடந்து "அண்ணாத்த" படம் வெற்றி அடைந்துள்ளது. மழை இல்லை என்றால் இந்த படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும். இதெல்லாம் பார்க்கும் போது பாட்ஷா படத்துக்கு நான் பேசிய டயலாக் தான் நினைவுக்கு வருது. ‛‛ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான். ஆனால் கெட்டவங்கள..."" என்று கூறி சிரித்தபடி முடித்திருக்கிறார்.
|
தங்கச்சங்கிலி பரிசு
இதனிடையே ‛அண்ணாத்த" படத்தின் இயக்குனர் சிவா வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டு தெரிவித்திருந்த ரஜினி, தற்போது படக்குழுவினரில் இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்ட முக்கியமானவர்களை வீட்டுக்கு அழைத்து, தங்கச்சங்கிலி பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!