
மாநாடு 2 எப்போது? - வெங்கட்பிரபு பதில்
மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த வில்லன் வேடத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் ரவிதேஜாவிடமும் பேசினோம். அவர் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைத்தோம். தற்போது மாநாடு படத்தை பார்த்துள்ள ரவிதேஜா தெலுங்கில் இந்த படத்தை ரீ மேக் செய்தால் வில்லனாக நான் தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
மாநாடு படத்தின் இறுதியில் மீண்டும் சிம்புவிற்கு டைம் லூப் வருவது போல் வைத்துள்ளோம். அப்படி சிம்புவிற்கு வரும்போது எஸ்.ஜே.சூர்யாவிற்கான காட்சிகளும் மீண்டும் வரும் என்று தெரிவித்துள்ள வெங்கட்பிரபு கூடிய சீக்கிரமே மாநாடு 2விற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!