
நடிகரின் பண்ணை வீட்டில் சூதாட்டம் ; 25 பேர் கைது
சமீபத்தில் ஆந்திராவில் ஒரு பண்ணை வீட்டில் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்து அதன் அடிப்படையில் அங்கு போலீஸார் சோதனை செய்தபோது சூதாட்ட விளையாட்டுக்களில் சுமார் 25 பேர் பணம் கட்டி ஈடுபட்டிருந்தனராம். அவர்களிடம் இருந்து ரொக்கமாக 25 லட்சம் வரை போலீசார் பறிமுதல் செய்தனராம்.
விசாரணையில் அந்த பண்ணை வீடு நடிகர் நாக சவுர்யாவுடையது என்பது தெரிய வந்துள்ளதாம். அதேசமயம் அது அவரது சொந்த பண்ணை வீடு அல்ல என்றும் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிக்கு ஒருவருக்கு சொந்தமான அந்த பண்ணை வீட்டை நாக சவுர்யா லீஸுக்கு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இப்போதுவரை இதுகுறித்து நாக சவுர்யா எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!