
ஒரு மாதம் காத்திருங்கள் : விஜய் பட இயக்குனர் வேண்டுகோள்
நவ 02, 2021
Advertisement
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து அவரது புதிய படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக இது உருவாகிறது. இந்தப்படத்தின் கதை குறித்தும் படத்தின் அப்டேட் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் வம்சி, ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
“நான் விஜய்யின் எளிமையை ரசிப்பவன்.. ஆனால் இந்தப்படத்தின் கதையை விஜய்க்கு இருக்கும் மாஸ் பவரை மனதில் வைத்தே உருவாக்கியுள்ளேன்.. அதேசமயம் இது அரசியல் படமல்ல.. படம் முழுதும் உணர்ச்சிகரமாக இருக்கும். அடுத்த மாதம் இறுதியில் இருந்து படம் குறித்த அப்டேட் தகவல்கள் உங்களை தேடி வரும்.. அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்” என கூறியுள்ளார் வம்சி பைடிப்பள்ளி.
“நான் விஜய்யின் எளிமையை ரசிப்பவன்.. ஆனால் இந்தப்படத்தின் கதையை விஜய்க்கு இருக்கும் மாஸ் பவரை மனதில் வைத்தே உருவாக்கியுள்ளேன்.. அதேசமயம் இது அரசியல் படமல்ல.. படம் முழுதும் உணர்ச்சிகரமாக இருக்கும். அடுத்த மாதம் இறுதியில் இருந்து படம் குறித்த அப்டேட் தகவல்கள் உங்களை தேடி வரும்.. அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்” என கூறியுள்ளார் வம்சி பைடிப்பள்ளி.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!