
அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா டிஎன்ஏ?
ஜூன் 18, 2025
தமிழ் சினிமாவில் வாரிசு நடிர்களில் ஒருவராக அறிமுகமானவர் அதர்வா. 80, 90களில் இளம் நாயகனாக வலம் வந்த நடிகர் முரளியின் மூத்த மகன். 2010ல் வெளிவந்த "பாணா காத்தாடி" படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அதர்வா. 2013ல் பாலா இயக்கத்தில் வெளிவந்த "பரதேசி" படம் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய ஒரு படமாக இருந்தது.
அதன்பிறகு அவர் நடித்த படங்களில் "ஈட்டி, இமைக்கா நொடிகள்" ஆகிய படங்கள் மட்டுமே அவருக்குக் குறிப்பிடும்படியான வெற்றிப் படங்களாக அமைந்தது. அதன்பிறகு கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் நடித்து வெளிவந்த "பூமராங், 100, தள்ளி போகாதே, குருதி ஆட்டம், ட்ரிகர், பட்டத்து அரசன், நிறங்கள் மூன்று" ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பேசப்படவில்லை.
இப்போது நான்கைந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அதர்வாவுக்கு நாளை மறுதினம் "டிஎன்ஏ" படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு அவசியமான ஒன்று. இத்தனை வருடங்கள், இவ்வளவு படங்கள் அவருக்குத் தராத திருப்புமுனையை "டிஎன்ஏ" தந்தால் தான் அவருக்கான அடுத்த படங்களுக்கும் வரவேற்பு இருக்கும்.
அதன்பிறகு அவர் நடித்த படங்களில் "ஈட்டி, இமைக்கா நொடிகள்" ஆகிய படங்கள் மட்டுமே அவருக்குக் குறிப்பிடும்படியான வெற்றிப் படங்களாக அமைந்தது. அதன்பிறகு கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் நடித்து வெளிவந்த "பூமராங், 100, தள்ளி போகாதே, குருதி ஆட்டம், ட்ரிகர், பட்டத்து அரசன், நிறங்கள் மூன்று" ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பேசப்படவில்லை.
இப்போது நான்கைந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அதர்வாவுக்கு நாளை மறுதினம் "டிஎன்ஏ" படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு அவசியமான ஒன்று. இத்தனை வருடங்கள், இவ்வளவு படங்கள் அவருக்குத் தராத திருப்புமுனையை "டிஎன்ஏ" தந்தால் தான் அவருக்கான அடுத்த படங்களுக்கும் வரவேற்பு இருக்கும்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!