
சுருளி ஏன் ஜகமே தந்திரம் ஆக மாறியது?
நேற்று படத்தின் இசை வெளியீட்டை முன்னிட்டு "டுவிட்டர் ஸ்பேஸ்" மூலம் படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடினார். அதில் சுமார் 17 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்களாம். அமெரிக்காவிலிருந்து தனுஷும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது படத்தலைப்பை அறிவிக்காமல்தான் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். அப்போது படத்திற்கு "சுருளி" என்று தலைப்பு வைத்துள்ளதாக பல செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கும் போது "ஜகமே தந்திரம்" என்றுதான் வந்தது.
அது பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நேற்று பேசுகையில், “படத்திற்கு "சுருளி" என்றுதான் தலைப்பைத் தேர்வு செய்து வைத்திருந்தோம். ஆனால், ஒருநாள் "நினைத்தாலே இனிக்கும்" பாடலான "ஜகமே தந்திரம்...." பாடலைக் கேட்ட போது அதுவே இப்படத்திற்குப் பொருத்தமான டைட்டிலாக இருக்கும் என்று நினைத்தேன். நான் ஒரு ரஜினி ரசிகர் என்பதாலும் அதையே வைத்துவிட்டேன்,” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!