
பாலா பெயரை சொல்ல மறந்த விக்ரம்
இந்நிலையில் நேற்று நடைபெற்ற "தங்கலான்" இசை வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம் அவரது பேச்சில், “நான் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தால் அதற்கான அங்கீகாரம் அனைத்தும் இயக்குநர் பா ரஞ்சித் - விஜய் - மணிரத்னம் - ஷங்கர் - ஹரி போன்ற இயக்குநர்களுக்கு தான் சேரும். ஏனெனில் இவர்கள் கொடுத்த ஊக்கம். வடிவமைத்த கதாபாத்திரம். கொடுத்த உத்வேகம் தான் காரணம். இவர்களைப் போன்ற இயக்குநர்கள் இருப்பதால்தான் என்னைப் போன்ற நடிகர்கள் உருவாக முடிகிறது” என்றார். மற்ற இயக்குனர்களின் பெயரைச் சொன்ன விக்ரம், பாலா பெயரை மட்டும் சொல்ல மறந்துவிட்டார்.
திருப்புமுனை தந்த "சேது", தேசிய விருது தந்த "பிதாமகன்" ஆகிய படங்களின் இயக்குனரான பாலாவை விட மற்ற இயக்குனர்கள் எந்த விதத்தில் அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள் என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தனது மகன் துருவ் நடித்த வர்மா படம் பிரச்னைக்கு பின் பாலாவும், விக்ரமும் பேசிக் கொள்வதில்லை. அதனால் தான் பாலா பெயரை விக்ரம் குறிப்பிடவில்லை என்கிறார்கள். இது குறித்து விக்ரமிடம் சீக்கிரமே ஒரு அறிக்கை வர வாய்ப்புள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!