
ஆர்ஆர்ஆர் 2 - ராஜமவுலியின் தந்தை தகவல்
ஏப் 04, 2022
Advertisement
பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வெற்றி பெற்ற ராஜமவுலி தற்போது ஆர்ஆர்ஆர் என்ற படத்தை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி வெளியிட்டுள்ளார். இந்தப் படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை 800 கோடி பட்ஜெட்டில் இயக்கப் போகிறார். இந்த நேரத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு ராஜமவுலியின் தந்தையும், கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத்திடம் பதில் கொடுத்திருக்கிறார்.
அதில், ‛‛ஆர்ஆர்ஆர் 2 உருவாக வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான ஐடியாவை ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆரிடம் பேசி உள்ளேன். அவர்களுக்கும் பிடித்துள்ளது. ஆனார் தற்போதைக்கு ஆர்ஆர்ஆர் 2 சாத்தியமில்லை. தற்போது மகேஷ் பாபு படத்தை ராஜமவுலி இயக்க உள்ளார். அந்த படம் முடிந்த பிறகு ஆர்ஆர்ஆர் 2 பற்றி முடிவெடுக்கப்படும்"" என தெரிவித்துள்ளார்.
அதில், ‛‛ஆர்ஆர்ஆர் 2 உருவாக வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான ஐடியாவை ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆரிடம் பேசி உள்ளேன். அவர்களுக்கும் பிடித்துள்ளது. ஆனார் தற்போதைக்கு ஆர்ஆர்ஆர் 2 சாத்தியமில்லை. தற்போது மகேஷ் பாபு படத்தை ராஜமவுலி இயக்க உள்ளார். அந்த படம் முடிந்த பிறகு ஆர்ஆர்ஆர் 2 பற்றி முடிவெடுக்கப்படும்"" என தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!