
மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட வடிவேலு
ஏப் 18, 2022
Advertisement
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலினை நாயகனாக நடித்து வரும் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரிசெல்வராஜ். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் எழுத்தாளரான மாரிசெல்வராஜ் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் மற்றும் மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு புத்தகங்களை எழுதி இருக்கிறார். அதையடுத்து தற்போது உச்சினியென்பது என்ற ஒரு கவிதை தொகுப்பையும் எழுதியுள்ளார் மாரி செல்வராஜ். இந்த தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!