
உஸ்தாத் பகத் சிங் விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன்
தான் பேசியது குறித்து குரல் மூலம் ஒரு விளக்க வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதில், “என் பேச்சு யார் மனதையாவது உண்மையிலேயே கீறி புண்படுத்தி இருந்தால் வருத்தம் தோய்ந்த மன்னிப்பைத் தெரிவித்து இப்பிரச்சினையை விட்டுவிட்டு இப்பொழுதை நற்பொழுதாக்கிக் கொள்ள வேண்டிக் கொள்கிறேன்.
நான் வாழ்க்கைப்பட்டிருப்பது தமிழுக்கு. சோறு, சுகம் யாவும் தமிழே தந்தது. போகும் வரை சொர்க்கம் தமிழே. இதை என்றும், எங்கும், ஏன் உலகெங்கும் பெருமையாய் உரக்கச் சொல்வேன். என் தாய்மொழி தெலுங்குதான் என்பதை அங்கு மட்டுமல்ல, இங்கும், இன்று மட்டுமல்ல, நேற்றும் முன்தினமும் சொல்லி இருக்கிறேன். தமிழ் உயர்ந்ததும் உன்னதமும் ஆனது மட்டுமல்ல, அன்பும் கருணையும் நிறைந்தது,” என தமிழை உயர்த்திப் பேசி இருக்கிறார்.
"உஸ்தாத் பகத் சிங்" விழாவில் மிகுந்த டென்ஷன். பதட்டத்தில் இருந்ததால் தெலுங்கில் எனக்கு சரியாக பேச வராது. வார்த்தைகளை கவனமாகக் களமிறக்க முடியாததால் வேர்க்க வேர்க்க பேசிவிட்டு இறங்கிவிட்டேன். எனவே, இதை ஆரம்பித்தவர்களே அன்போது முடித்துவிடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனாலும், சாதி பெயரைக் குறிப்பிட்டுப் பேசியது தவறுதான் என எந்த இடத்திலும் அவர் குறிப்பிடவில்லை. அதைப் பற்றிப் பேசுவதை மட்டும் கவனமாகத் தவிர்த்து, மொத்தமாக தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!