
மீண்டும் டைரக்சனில் களமிறங்கிய தம்பி ராமையா
முக்கிய வேடங்களில் பி எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின், இயக்குநர் மூர்த்தி, "கும்கி" அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், "கும்கி" தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படம் குறித்து இயக்குநர் தம்பி ராமையா கூறும்போது, “இந்தப் படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தில் நான் இயக்குவதற்கு காரணமே, சுரேஷ் காமட்சி. வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல ஒரு மிகச்சிறந்த இயக்குநரும் கூட. கிட்டத்தட்ட 12 இயக்குநர்களிடம் இந்தக் கதையை கூறிவிட்டு, அதன் பின்னர் இந்த படத்தை தயாரிக்கிறார் சுரேஷ் காமாட்சி. பெருந்திணைக் காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படம் ஒரு வாழ்வியல் கதை என்பதால், ஒரு மனிதனின் சுயசரிதை என்பதால் இதை நானே இயக்குவது தான் சரியாக இருக்கும் என மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ளேன்"" என்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(ஆக.,3) பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது .


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!