
சமந்தா விவாகரத்து : ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு
குறிப்பாக சமந்தாவின் காஸ்டியூமர் பிரீத்தம் ஜுகல்கர் என்பவருடனும் சமந்தாவை இணைத்து செய்திகள் பரவின. அதையடுத்து அதை சமந்தா மறுத்ததோடு, பிரீத்தமும், சமந்தா எனது சகோதரி போன்றவர் என்று பதில் கொடுத்தார்.
இந்தநிலையில் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி அளித்த ஒரு பேட்டியில், சமந்தா- பிரீத்தம் ஜுகல்கரை இணைத்து வெளியான செய்தி பற்றி கூறுகையில், சமந்தா- பிரீத்தமிற்கு இடையிலான நட்பு காரணமாக கண்டிப்பாக சமந்தா விவகாரத்து செய்ய வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். காரணம், பிரீத்தம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். அதனால் அவர்களுக்கிடையே எந்தவித தவறான உறவும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். சமீபகாலமாக சமந்தா ஓவரான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அதனால் நாகசைதன்யா சமந்தாவிற்கிடையே அந்த விசயத்தில்கூட பிரச்சினை உருவாகி பிரிவுக்கு காரணமாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!