
கைதி-2 ஆரம்பிக்கலாமா? எஸ்.ஆர். பிரபு பதிவு
ஜூன் 04, 2022
2019ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் கைதி. 100 கோடி வசூலித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர் மத்தியில் தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கிறது. மேலும் தற்போது கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி திரைக்கு வந்திருக்கும் விக்ரம் படத்தில் கைதி படத்திற்கு தொடர்புள்ள ஒரு சில காட்சிகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாகவே நேற்று முன்தினம் தனது சமூக வலைத்தளத்தில் கைதி படத்தை பார்த்துவிட்டு விக்ரம் படத்தை பாருங்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இதற்கு கைதி படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு, ‛கைதி-2 படத்தை ஆரம்பிக்கலாமா?" என்று பதிவிட்டுள்ளார். இப்படி அவர் பதிவிட்டதை அடுத்து கைதி-2 படத்தை உடனே இயக்குமாறு கார்த்தி ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ்க்கு வேண்டுகோள் வைக்க தொடங்கிவிட்டார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!