
அறுவை சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சித்தார்த்
அக் 01, 2021
Advertisement
தெலுங்கில் சர்வானந்துடன் இணைந்து சித்தார்த் நடித்துள்ள படம் மகா சமுத்திரம். இந்த படத்தின் சண்டை காட்சி ஐதராபாத்தில் நடைபெற்றபோது சித்தார்த்தின் முதுகில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்ற சித்தார்த் தற்போது நலமுடன் இந்தியா திரும்பியிருக்கிறார்.
அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அறுவை சிகிச்சை முடிந்து லண்டனில் இருந்து நாடு திரும்பி விட்டேன். தற்போது மகாசமுத்திரம் படத்தின் டப்பிங்கிற்காக ஐதராபாத்தில் இருக்கிறேன். அனைவரது வாழ்த்துக்கும் நன்றி. ஒரு சண்டை காட்சியின்போது எனது முதுகில் காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பிறகு நலமுடன் இருக்கிறேன். சில மாதங்களுக்கு கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இப்போதைக்கு கடினமாக உழைத்த ஒரு அழகான படத்தை ரசிகர்களுடன் இணைந்து ரசிக்க தயாராக இருக்கிறேன். விரைவில் அனைவரையும் சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார் சித்தார்த்.
அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அறுவை சிகிச்சை முடிந்து லண்டனில் இருந்து நாடு திரும்பி விட்டேன். தற்போது மகாசமுத்திரம் படத்தின் டப்பிங்கிற்காக ஐதராபாத்தில் இருக்கிறேன். அனைவரது வாழ்த்துக்கும் நன்றி. ஒரு சண்டை காட்சியின்போது எனது முதுகில் காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பிறகு நலமுடன் இருக்கிறேன். சில மாதங்களுக்கு கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இப்போதைக்கு கடினமாக உழைத்த ஒரு அழகான படத்தை ரசிகர்களுடன் இணைந்து ரசிக்க தயாராக இருக்கிறேன். விரைவில் அனைவரையும் சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார் சித்தார்த்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!