
அதிர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்
நவ 29, 2022
Advertisement
தமிழில் புதிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக "சலார்" படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். சிரஞ்சீவியுடன் நடித்துள்ள "வால்டர் வீரய்யா", பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ள "வீர சிம்மா ரெட்டி" படங்கள் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளன.
தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் ஸ்ருதி, நேற்று மேக்கப் இல்லாத சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். “பர்பெக்ட் ஆன செல்பிகள் மற்றும் பதிவுகள் நிறைந்த இந்த உலகத்தில், "பைனல் கட்" ஆக வராத சில உங்களுக்காக இதோ…. மோசமான ஹேர் நாள், ஜுரம் மற்றும் சைனஸ் காரணமாக முகம் வீங்கிய நாள், மாத விடாய் நாட்கள் மற்றும்... இன்ன பிற… இவற்றையும் நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன், விசித்திரமாக இரு…,” என்று அந்த புகைப்படங்களுக்கான காரணத்தையும் பதிவிட்டுள்ளார்.
முன்னணி நடிகர்களுடன், பிரம்மாண்டப் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் இப்படி வெளிப்படையான பதிவுகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளார். இப்படி இயல்பாக இருக்கும் நடிகைகளைப் பார்ப்பதும் விசித்திரம் தான்.
தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் ஸ்ருதி, நேற்று மேக்கப் இல்லாத சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். “பர்பெக்ட் ஆன செல்பிகள் மற்றும் பதிவுகள் நிறைந்த இந்த உலகத்தில், "பைனல் கட்" ஆக வராத சில உங்களுக்காக இதோ…. மோசமான ஹேர் நாள், ஜுரம் மற்றும் சைனஸ் காரணமாக முகம் வீங்கிய நாள், மாத விடாய் நாட்கள் மற்றும்... இன்ன பிற… இவற்றையும் நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன், விசித்திரமாக இரு…,” என்று அந்த புகைப்படங்களுக்கான காரணத்தையும் பதிவிட்டுள்ளார்.
முன்னணி நடிகர்களுடன், பிரம்மாண்டப் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் இப்படி வெளிப்படையான பதிவுகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளார். இப்படி இயல்பாக இருக்கும் நடிகைகளைப் பார்ப்பதும் விசித்திரம் தான்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!