
ஏற்றி விட்ட ஏணியை மறக்க வேண்டாம் : இந்துஜாவுக்கு ஆர்.கே.சுரேஷ் பதிலடி
இந்த நிலையில் "காலங்களில் அவள் வசந்தம்" என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.கே.சுரேஷ் இந்துஜாவின் இந்த கருத்து குறித்து வெளிப்படையாக பேசினார். அவர் பேசியதாவது: நடிகை இந்துஜா நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அந்த நேர்காணலில் இந்துஜாவிடம், "நீங்கள் நடித்ததிலேயே மோசமான படம் எது?" என கேள்வி கேட்கிறார்கள். அதற்கு அவர், ""பில்லா பாண்டி"" என கூறியிருக்கிறார்.
"பில்லா பாண்டி" படத்தில் நான் தான் அவரை அறிமுகப்படுத்தினேன். அவருக்கு அது தான் முதல் படம். அப்போது தொடர்ந்து 4 படங்கள் என்னுடைய ஸ்டூடியோ 9 தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்தமானார். பில்லா பாண்டி நல்ல கதைக்களம் கொண்ட படம். எனக்கு மிகவும் பிடித்த படம். இந்துஜாவிற்கு அப்படி இருக்க வேண்டும் என அவசியமில்லை.
நாம் எந்த இடத்தில் இருந்து வந்தோமோ அதை நான் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஏற்றிய ஏணியை மறந்துவிடக்கூடாது. சினிமா ஒரு பெரிய வட்டம். ஒரு ராட்டினம் போல சுற்றி கீழே வந்துவிடும். அதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!