
உப்பெனா வெற்றி விழாவில் ராம் சரண்
இப்படம் இதுவரையிலும் சுமார் 50 கோடி வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அறிமுக நடிகரின் படம் ஒன்றிற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பது தெலுங்குத் திரையுலகினருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது-
இப்படத்தை இயக்கிய புச்சிபாபு அடுத்து இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தமாகிவிட்டார். விஜய் சேதுபதிக்கு இனி தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகம் என்று சொல்லுமளவிற்கு இந்தப்படம் அமைந்துவிட்டது.
இன்று இப்படத்தின் வெற்றிவிழாவை ராஜமுந்திரியில் கொண்டாட உள்ளார்கள். சிறப்பு விருந்தினராக ராம்சரண் கலந்துகொள்ள உள்ளார். பட வெளியீட்டிற்கு முந்தைய விழாவில் ராம்சரண் அப்பா சிரஞ்சீவி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இப்படத்தின் மற்ற மொழி ரீமேக் உரிமைகளுக்கு தற்போது போட்டி ஏற்பட்டுள்ளதாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!