
ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா
ராம்கோபால் வர்மா எப்படி இந்த படத்திற்குள் ஹீரோவாக வந்தார் என்பது குறித்து தயாரிப்பாளர் ராம சக்திய நாராயண கூறும்போது, “நான் புதிய படம் எடுப்பதற்காக சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா உள்ளிட்ட முன்னணி நடிகர்களிடம் தேதி கேட்டு பார்த்தேன். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை. அதனால் என்னுடைய "கடவுளான" ராம்கோபால் வர்மாவையே ஹீரோவாக்க முடிவு செய்தேன். ராம்கோபால் வர்மாவுக்கு 50 கோடி சம்பளம் கொடுக்கலாம் என்கிற அளவுக்கு வொர்த் ஆனவர். ஆனால் இப்போது வரை ஒரு பைசா சம்பளம் கூட வாங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் முடியட்டும் அப்புறம் வாங்கிக் கொள்கிறேன் என்று பெருந்தன்மையாக சொல்லிவிட்டார்” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!