
உலகக்கோப்பை கோல்டன் டிக்கெட் : நன்றி சொன்ன ரஜினி
செப் 20, 2023
Advertisement
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்.,5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை சிறப்பு மாடத்தில் அமர்ந்து கண்டுகளிப்பதற்கான "கோல்டன் டிக்கெட் பார் இந்தியன் ஐகான்ஸ்" என்ற திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகள் பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. நேற்று நடிகர் ரஜினிகாந்தும் இந்த டிக்கெட்டை பெற்றார். அவருக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கினார்.
இந்நிலையில் டிக்கெட் பெற்ற ரஜினி நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛2023 ஐசிசி உலக கோப்பை தொடருக்காக பிசிசி-யிடமிருந்து மதிப்புமிக்க கோல்டன் டிக்கெட்டை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக பிசிசிஐக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்புள்ள ஜெய்ஷா ஜி, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் நன்றி,"" என பதிவிட்டுள்ளார்.
அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. நேற்று நடிகர் ரஜினிகாந்தும் இந்த டிக்கெட்டை பெற்றார். அவருக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கினார்.
இந்நிலையில் டிக்கெட் பெற்ற ரஜினி நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛2023 ஐசிசி உலக கோப்பை தொடருக்காக பிசிசி-யிடமிருந்து மதிப்புமிக்க கோல்டன் டிக்கெட்டை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக பிசிசிஐக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்புள்ள ஜெய்ஷா ஜி, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் நன்றி,"" என பதிவிட்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!