
குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை - ஜெயிலர் விழாவில் ரஜினி பேச்சு
குடிப்பழக்கம் தான் எனக்கு சூனியம்
விழாவில் அவர் பேசியதாவது : ‛‛குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. நாம் நமது வேலையை பார்த்துகிட்டு போய்க் கொண்டே இருக்கணும். குடிப்பழக்கம் மட்டும் எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் நான் இப்போது இருப்பதை விட இன்னும் உயரத்தில் எங்கோ இருந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்டே சூனியம். குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே தயவு செய்து குடிப்பழக்கத்தை விடுங்கள்.
காட்டில் பெரிய மிருகங்களை எப்போதும் சின்ன மிருகங்கள் சீண்டிக்கிட்டே இருக்கும். உதாரணத்திற்கு கழுகை, காக்கா சீண்டிக்கிட்டே இருக்கும். ஆனால் கழுகு அமைதியாக இறக்கையை கூட ஆட்டாமல் உயரத்தில் பறந்து கொண்டே இருக்கும். காக்காவால் அது முடியாது. உலகில் உன்னதமான மொழி மவுனம் மட்டுமே.
யாருக்கும் பயப்பட மாட்டேன்
சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்னை இப்போது அல்ல, 1977லேயே ஆரம்பித்தது. சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் ரஜினி பயந்துட்டாருனு சொன்னாங்க. கடவுளுக்கும், நல்லவர்களுக்கும் மட்டுமே பயப்படுவேன். மற்ற யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்.
இவ்வாறு ரஜினி பேசினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!