
சொந்த செலவில் ஏழைகளுக்கு தடுப்பூசி வழங்கிய பிரணிதா
கொரோனா தொற்றின் முதல் அலையின் போது ஏழைகளுக்கு உணவு அளித்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி அளித்தல் போன்ற பணிகளில் இறங்கியவர் பிரணிதா சுபாஷ். தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரணிதாவுக்கும் தொழில் அதிபர் நிதின் ராஜுவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
தனது திருமண பரிசாக தனது அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி பெங்களூருவில் தடுப்பூசி முகாம் அமைத்து சொந்த செலவில் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்கினார். இந்த பணியை கணவருடன் இணைந்து தொடர்ந்து செய்வேன் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!