
பிரபாஸ் சோம்பேறி அல்ல.. தொலைநோக்கு பார்வை கொண்டவர்: காஜல் அகர்வால்
எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலிக்குப் பிறகு, இந்திய அளவில் மிகப்பெரிய பான்-இந்தியா மார்க்கெட்டை உருவாக்கிய முதல் தென்னிந்திய நடிகர் பிரபாஸ் ஆவார். இவருடைய படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மிகப் பெரிய வசூலை குவித்து வருகின்றன. பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான, "சாஹோ, ராதே ஷியாம், சலார்" மற்றும் அமிதாப் பச்சன், கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த சைன்ஸ்-பிக்சன் படமான "கல்கி 2898 ஏடி" போன்ற மெகா பட்ஜெட் படங்களில் நடித்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் பிரபாஸுடன் "டார்லிங், மிஸ்டர் பெர்பெக்ட்" ஆகிய படங்களில் இணைந்து நடித்தவரான காஜல் அகர்வால், பிரபாஸின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை பாராட்டி, ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "பிரபாஸை சினிமாவில் மகத்தான சாதனைகளை படைப்பதற்காகவே பிறந்த ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார்" என்று விவரித்துள்ள காஜல், பிரபாஸ் ஒரு சோம்பேறி என்று மற்றவர்கள் கூறும் பொதுவான கருத்தை மறுத்துள்ளார்.
""இந்திய சினிமாவில் மிகவும் கடினமாக உழைக்கும் நடிகர்களில் பிரபாஸூம் ஒருவர். அவர் எப்போதும் தனது இலக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். பிரபாஸ் தனது திரைப்பயணம் குறித்து மிகவும் தெளிவான தொலைநோக்கு பார்வையைக் கொண்டுள்ளார். தான் எதை நோக்கிய பயணத்தில் இருக்கிறோம் என்பதை அவர் துல்லியமாக அறிந்து வைத்துள்ளார்"" என்றும் கூறியுள்ளார் காஜல் அகர்வால்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!