
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பூஜா ஹெக்டே
ஜூலை 22, 2021
Advertisement
ராதே ஷ்யாம், ஆச்சார்யா, பீஸ்ட் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள பூஜாஹெக்டே, தடுப்பூசி போடும்போது அருகில் இருந்த தனது தாயாரை பிடித்துக் கொண்டுள்ளார். அதைப்பார்க்கையில், பூஜாவுக்கு ஊசி போடுவது பயம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதோடு தனது இரண்டு வயதில் தனக்கு தடுப்பூசி போட்டதையும் இந்த தருணத்தில் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்கு உள்ளான பூஜா ஹெக்டே, அதையடுத்து சிகிச்சைக்குப்பிறகு நோய் தொற்றில் இருந்து மீண்டார் என்பது குறிப்படத்தக்கது.
மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்கு உள்ளான பூஜா ஹெக்டே, அதையடுத்து சிகிச்சைக்குப்பிறகு நோய் தொற்றில் இருந்து மீண்டார் என்பது குறிப்படத்தக்கது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!