
மீண்டும் ஏமாற்றம் : ஆகஸ்ட்டில் தான் தியேட்டர்கள் திறப்பு ?
அடுத்த வார ஊரடங்கு தளர்வு தான் தமிழகம் முழுமைக்குமான ஒரே மாதிரியான தளர்வுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால் அவற்றிற்கு வரும் வாரம்தான் குறிப்பிடத்தக்க தளர்வுகள் கிடைக்க உள்ளன. இப்படி மாவட்டத்திற்கு மாவட்டம் கொரோனா தாக்கத்தில் மாறுபாடு இருப்பதால்தான் தியேட்டர்களைத் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்கிறார்கள்.
பேருந்து, கடைகள் உள்ளிட்டவை மக்களுக்கான அவசியத் தேவைகளாக உள்ளன. சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சமாகத்தான் இருக்கிறது. மேலும், திருமணம், இறுதி ஊர்வலம் ஆகியவற்றிற்கான கட்டுப்பாடுகள் அப்படியே தான் உள்ளது. மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தொடர்ந்து தவிர்க்க அரசு வலியுறுத்தி வருகிறது.
எனவே, இந்த ஜுலை மாதத்திலும் தியேட்டர்களுக்கான அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள். ஆகஸ்ட் மாதத்திலிருந்து வேண்டுமானால் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!