
இப்போதைக்கு டைரக்ஷன் இல்லை ; கோவையில் பட்டியல் அடுக்கிய தனுஷ்
ஏப் 26, 2026
Advertisement
நடிகர் தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள "கர" திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. நடிப்பு மட்டுமல்லாது டைரக்ஷனிலும் நுழைந்த தனுஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு "ப.பாண்டி" என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். அதன் பிறகு ஒரு சிறிய இடைவெளி விட்டாலும் கடந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே "ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை" என மூன்று படங்களை அடுத்தடுத்து டைரக்ட் செய்து வெளியிட்டார். அடுத்ததாக எப்போது டைரக்ஷன் பண்ணப் போகிறார் என்கிற கேள்விக்கு சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கர படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பதில் சொன்னார் தனுஷ்.
இது குறித்து தனுஷ் கூறும்போது , “அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமியின் படம், மாரி செல்வராஜ் டைரக்ஷனில் ஒரு படம், அப்புறம் லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து டைரக்ஷனில் ஒரு படம் என மூன்று இயக்குனர்கள் எனக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.. இதில் "வடசென்னை 2" படமும் இருக்கிறது. இந்த படம் இந்த வரிசையில் எங்கே இடம் பிடிக்கும் என நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இவற்றையெல்லாம் முடித்துவிட்டு தான் டைரக்சன் பற்றி மீண்டும் யோசிக்க வேண்டும்” என்று கூறினார். அந்த வகையில் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு தனுஷ் டைரக்ஷன் பக்கம் கவனம் செலுத்த மாட்டார் என தெரிகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!