
நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது : உறுதிபடுத்திய நயன்தாரா
இந்த நிலையில் தற்போது அவரை விஜய் டிவிக்காக ஒரு பேட்டி எடுத்துள்ளார் திவ்யதர்ஷினி. இந்த பேட்டி ஆகஸ்ட் 15-ந்தேதி ஒளிபரப்பாக உள்ளது. அந்த பேட்டியின் பிரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், தனக்கும் டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதை உறுதிபடுத்தியுள்ள நயன்தாரா, விக்னேஷ்சிவனிடம் அனைத்து விசயங்களுமே தனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவ்வப்போது நெருக்கமாக எடுத்த செல்பி போட்டோக்களை பதிவிட்டும் வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா கொச்சி சென்றபோது அங்கு நிச்சயதார்த்தம் எளிய முறையில் நடந்ததாக கூறப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!