
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு
மறைந்த நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கை இந்த கதை பேசுகிறதா? இல்லை, வேறுவகை கதைகளமா என்று அவர்கள் தெளிவுப்படுத்தவில்லை. துல்கர் சல்மான் நடித்த காந்தா படம் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு சம்பந்தப்பட்ட கதை என்று தகவல் பரவியது. ஆனால், படம் வெளியானபோது அது வேறு, இது வேறு என பார்வையாளர்கள் புரிந்து கொண்டனர்.
பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் என்பவர் கொலை செய்யப்பட, அந்த வழக்கில் அப்போதைய சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பல மாதம் சிறை வாசம் அனுபவித்து பின்னர் விடுதலை ஆனார்கள். சினிமாகாரர்கள் குறித்து ஆபாசமாக, தவறாக எழுதியதால் லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!