
சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி?
தற்போது சுந்தர். சி "மூக்குத்தி அம்மன்" இரண்டாம் பாகத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து சுந்தர். சி இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் சுந்தர்.சி சமீபத்தில் நடிகர் கார்த்தியை எதார்த்தமாக சந்தித்த வேளையில் கார்த்தியிடம் ஒரு புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார். இதனால் இருவரும் இணைந்து பணிபுரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாம். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!