
கெட்ட பெயர் வேண்டாம் : உதயநிதி எடுத்த முடிவு, தடுத்த கமல்
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், நான் நல்ல படங்களாக தங்களது படங்களை வாங்கி வெளியிடுமாறு கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்களின் படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறேன். ஆனால் உதயநிதி மிரட்டி படங்களை வாங்கி வருவதாக ஒரு தகவல் வெளியானது. அதையடுத்து எனது தந்தை என்னை அழைத்து, இது தேவை இல்லை என்று என்னிடத்தில் கூறினார். கெட்ட பெயர் வேண்டாம் என்று விநியோகம் செய்வதை விட்டு விடலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் நாங்கள் இப்படி ஒரு முடிவெடுத்த நேரம், இதை கேள்விப்பட்ட கமல் சார், என் தந்தையை தொடர்பு கொண்டு, உதயநிதியை தொடர்ந்து படங்களை விநியோகம் செய்ய சொல்லுங்கள். அவர் வந்த பிறகுதான் சினிமா நன்றாக இருக்கிறது. வெளிப்படை தன்மையோடு உண்மையான கணக்குகளை கொடுக்கிறார். இது படங்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் ரொம்ப நல்ல விஷயம் கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் நிறைய படங்கள் இல்லாமல் குறைவான படங்களை வாங்கி விநியோகம் செய்யுமாறு என் தந்தை கூறினார். அதன் காரணமாகவே தொடர்ந்து குவாலிட்டியான நல்ல படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறேன் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் உதயநிதி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!