
நான் வாத்தியார் இல்லை ; அல்போன்ஸ் புத்ரனுக்கு கமல் பதில்
தற்போது மூத்த இயக்குனர்களான கே.பாலச்சந்தர், சிங்கிதம் சீனிவாசராவ், அனந்து, பாலுமகேந்திரா உள்ளிட்டவர்களின் புகைப்படங்களை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள கமல், அவர்கள் தனக்கு எப்படி கற்றுத்தந்தார்கள் என்பது பற்றியும் கூறியுள்ளார்.
அதேசமயம் அல்போன்ஸ் புத்ரன் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் கூறும்போது, “என்னிடம் கோரிக்கை வைத்த அல்போன்ஸ் புத்ரனுக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா புத்திரன்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், அவர்களை போல என்னால் கற்றுக் கொடுக்க முடியாது.. காரணம் நான் ஆசரியர் அல்ல.. அந்த அளவுக்கு ஒரு தாயைப்போல என்னால் தியாகம் செய்ய முடியாது. நான் இப்போதும் ஒரு மாணவன் தான். அதுவும் சுயநலமிக்க மாணவன்” என்று கூறியுள்ளார்.
அதாவது தனது படங்களின்போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை மட்டுமே தன்னால் கூறமுடியும் என்றும், அவற்றை படமாக்கிய விதம் பற்றி தன்னால் கற்றுக் கொடுக்க முடியாது என்பதையும் அவரது பாணியில் "தெளிவாக" விளக்கியுள்ளார் கமல். இந்த விளக்கத்துக்கு “ஒரு டன் நன்றிகள் சார்” என நன்றி கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!