
கோப்ரா பட்ஜெட் அதிகமாக நான் காரணம் இல்லை: இயக்குனர் சொல்கிறார்
சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது பற்றி சமூகவலைதளத்தில் குறிப்பிட்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து அதில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தவர் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு நன்றி தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து தயாரிப்பாளர் டி.சிவா, "போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு, அதைத் தாங்கிக்கொண்டு படத்தை முடித்துக்கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அஜய் ஞானமுத்து, "கோப்ராவின் பட்ஜெட் அதிகமானதற்குக் காரணம் நான் இல்லை என்பதை எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும். புரளிகளை விட ஆதாரங்கள் தெளிவாக, சத்தமாகப் பேசும். குழு என்றால் அது தயாரிப்பாளரும் சேர்ந்துதான். நான் என்றும் அவரை கைவிடவில்லை" என்று தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!