
என்னிடம் எந்த திட்டமிடலும் இல்லை : விஜய் சேதுபதி
ஜூலை 13, 2021
Advertisement
ஹீரோ, வில்லன் என மாறுபட்ட கோணங்களில் தன்னை வெளிப்படுத்தி வருபவர் விஜய் சேதுபதி. அதோடு தற்போது அவர் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார். இந்த நிகழ்ச்சியின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது : என்னைப் பொறுத்தவரை திரைப்படங்கள், வெப்சீரிஸ் இரண்டையுமே ஒரே மாதிரியாகத் தான் நினைக்கிறேன். ஒரே மாதிரியான நடிப்பைத்தான் வெளிப்படுத்துகிறேன் என்றார்.
ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடிக்கிறீர்கள்? உங்களது இலக்கு எதை நோக்கி செல்கிறது? என்ற கேள்விக்கு ‛‛எனது வாழ்க்கையில் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்ற எந்த திட்டமிடலும் இல்லை. என் இதயம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட்டு வருகிறேன். நான் எடுக்கும் முடிவுகள் தவறாக இருந்தாலும் அதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொள்கிறேன்"" என்றும் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடிக்கிறீர்கள்? உங்களது இலக்கு எதை நோக்கி செல்கிறது? என்ற கேள்விக்கு ‛‛எனது வாழ்க்கையில் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்ற எந்த திட்டமிடலும் இல்லை. என் இதயம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட்டு வருகிறேன். நான் எடுக்கும் முடிவுகள் தவறாக இருந்தாலும் அதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொள்கிறேன்"" என்றும் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!