
புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டவருக்கு வசனம் எழுத வாய்ப்பு
ஷங்கர் அடுத்து தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்திற்கு சாய் மாதவ் புர்ரா என்பவர் தான் வசனம் எழுதியுள்ளார். ஷங்கர் படத்திற்கு வசனம் எழுதுவது குறித்து, “ஜென்டில்மேன்" படம் வெளியான போது, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கனவாக இருந்தேன். இன்று, அவருடைய படத்திற்கு நான் வசனம் எழுதுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல வெற்றிகரமான தெலுங்குப் படங்களுக்கு வசனம் எழுதியவர் சாய் மாதவ். “ஆர்ஆர்ஆர், சாகுந்தலம், பிரபாஸ் - நாக் அஷ்வின் இணையும் படம் ஆகியவற்றிற்கு இவர்தான் வசனம் எழுதி வருகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!